Begin typing your search above and press return to search.
தஞ்சை அருகே மனைவி பற்றி பேசியவரை தட்டிக் கேட்டவருக்கு பீர் பாட்டில் குத்து
தஞ்சை அருகே மனைவி பற்றி பேசியவரை தட்டிக் கேட்டவருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது.
HIGHLIGHTS
தஞ்சையை அடுத்த திருவாய்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (52) விவசாயி. இவரது மனைவியை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (38) என்பவர் தரக்குறைவாக பேசி திட்டியுள்ளார். இதுகுறித்து மாணிக்கவாசகம் அவரை தட்டிக் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் மணிகண்டன் ஆத்திரம் அடைந்து பீர் பாட்டிலால் மாணிக்கவாசகத்தை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து தாலுகா போலீசில் மாணிக்கவாசகம் புகார் கொடுத்தார். இதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.