நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகம் வழங்கி பணியாளர்களை கவுரவிக்கும் தஞ்சை மாநகராட்சி
தஞ்சை மாநகராட்சி தகன மேடை பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகம் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
மாநகராட்சி பணியாளர்களின் நலனில் அக்கறை காட்டும் தஞ்சை மாநகராட்சி 16 பொருட்கள் அடங்கிய நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகத்தை ஊழியர்களுக்கு வழங்கி கவுரவிப்பு.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான சாந்திவனம் இடுகாட்டில் நவீன எரியூட்டும் தகனமேடை செயல்பட்டு வருகிறது. இந்த எரிவாயு தகன மேடையில், கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் பணி நடைபெற்று வருகிறது.
அங்கு பணிபுரியும், மாநகராட்சி பணியாளர்கள் கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக ஓய்வில்லாமல் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் சேவையை பாராட்டியும்., நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் விதமாக பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, அத்திப்பழம், உலர் திராட்சை, நிலக்கடலை, பாசிப்பயிறு, தட்டப்பயிறு உள்ளிட்ட 16 பொருட்கள் அடங்கிய பெட்டகம், மாநகராட்சி மற்றும் மதர்தெரஸா பவுண்டேசன் சார்பாக வழங்கப்பட்டது. மேலும் மாநகராட்சி சார்பில் பாதுகாப்பு கவச உடை, கையுறை, முகக் கவசங்கள் ஆகியவையும் வழங்கப்பட்டது.