Begin typing your search above and press return to search.
சொத்து வரி உயர்வு: திருபுவனம் பேரூராட்சியில் அதிமுக வெளிநடப்பு
சொத்து வரி உயர்வை கண்டித்து திருபுவனம் பேரூராட்சியில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
HIGHLIGHTS
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சி மன்ற கூட்டம், நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் சொத்து வரி உயர்வு குறித்து தீர்மானிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருபுவனம் அதிமுக நகர செயலாளரும் பேரூராட்சி மன்ற உறுப்பினருமான சிங். செல்வராஜ் தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் ஐந்து பேரும் வெளிநடப்பு செய்தனர். சொத்து வரியை உயர்த்தாதே, உயர்த்தாதே!! என கோஷம் எழுப்பியவாறு வெளியில் வந்தனர். பேரூராட்சி வாசலில் நின்ற அதிமுகவினரும் சேர்ந்து கொண்டு திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.