தென்காசி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு பா.ம.க வேட்புமனு தாக்கல்
தென்காசி மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் மனுதாக்கல் செய்தார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது புதிய மாவட்ட பிரிவினைகளின் காரணமாக ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்த ஒன்பது மாவட்டங்களிலும் விரைவாக தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது ஆகிய இரு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த பதினைந்தாம் தேதி தொடங்கியது. இன்று வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளாகும்.
தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றான தென்காசி மாவட்டத்தில் இன்று வேட்பு மனு தாக்கலில் விறு விறுப்பு காணப்பட்டது. தென்காசி மாவட்ட ஊராட்சியின் எட்டாவது வார்டு பகுதிக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராம் குமார் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
மனு தாக்கலின்போது மாநில துணைப் பொதுச் செயலாளர் இசக்கிமுத்து, நகரச் செயலாளர் சங்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.