தென்காசி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்
தென்காசி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் 24.07.2022 ஞாயிறுக்கிழமை அன்று 1000 மையங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் ஞாயிறுக்கிழமை அன்று கொரோனா தடுப்பூசி முகாம் 1000 மையங்களில் நடைபெறுகிறது. எனவே இதுவரை கொரோனா தடுப்பூசி இரண்டாவது தவணை போடாதவர்கள் போட வேண்டியவர்கள் மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவுபெற்ற 18 வயதிற்கு மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் இலவசமாக போடப்படுகிறது. காலை, நண்பகல் பிற்பகல் என வெவ்வேறு இடத்திலும், நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி உள்ள வார்டு பகுதிகள், பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதில் 12 வயதிற்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள் மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி போடவேண்டியவர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.