/* */

வைக்கோல் படப்பில் தீ : தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

வைக்கோல் படப்பில் தீ : தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் வைக்கோல் படப்பில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

தென்காசி மாவட்டம் சுரண்டை அரண்மனை தெருவில் வசித்து வரும் சுப்பையா பாண்டியன் என்பவர் மகன் அழகுதுரை. இவர் தனக்கு சொந்தமான மாட்டுத்தொழுவத்தில் சுமார் 100 வைக்கோல் கட்டுகளை மாட்டுத்தீவனத்திற்காக வைத்திருந்தார். நேற்று மதியம் இந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவம் குறித்து சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் அணியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ரவீந்திரன், சாமி, ராஜேந்திரன், உலகநாதன் ஆகியோர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். எனினும் சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 80 வைக்கோல் கட்டுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

Updated On: 20 April 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது