வைக்கோல் படப்பில் தீ : தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
தென்காசி மாவட்டம் சுரண்டையில் வைக்கோல் படப்பில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அரண்மனை தெருவில் வசித்து வரும் சுப்பையா பாண்டியன் என்பவர் மகன் அழகுதுரை. இவர் தனக்கு சொந்தமான மாட்டுத்தொழுவத்தில் சுமார் 100 வைக்கோல் கட்டுகளை மாட்டுத்தீவனத்திற்காக வைத்திருந்தார். நேற்று மதியம் இந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவம் குறித்து சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் அணியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் ரவீந்திரன், சாமி, ராஜேந்திரன், உலகநாதன் ஆகியோர் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். எனினும் சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 80 வைக்கோல் கட்டுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.