பா.ஜ.க. நிர்வாகி கொலை சம்பவம் கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க. நிர்வாகி கொலை சம்பவம் கண்டித்து தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
பா.ஜ.க. பட்டியலின அணி சார்பில் தென்காசியில் தி.மு.க. அரசை கண்டித்து 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பி.ஜி.டி சங்கர் (42). இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பா.ஜ.க.வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில பொருளாளராகவும் இருந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து பா.ஜ.க.வினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க. பட்டியலின அணியினர் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க. நிர்வாகி படுகொலை தொடர்பாக குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும். மேலும் தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாகவும், ரவுடியிசம் அதிகரித்து விட்டதாகவும் கூறி கோஷங்கள் எழுப்பினார்கள். திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.