Begin typing your search above and press return to search.
சிவகங்கையில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கான சிறப்பு கண்காணிப்பு அலுவலர் மகேசன் காசிராஜன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி,சிவகங்கை மாவட்டத்திற்கு மகேஷன் காசிராஜன் நியமித்துள்ளதை அடுத்து இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி மற்றும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக மகேஷ் காசிராஜன் சுகாதாரத்துறை இணை இயக்குனர் சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் கொரானா தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது