/* */

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

சிவகங்கையில் விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 220 கிலோ தடை செய்த புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை நேருபஜார் பகுதியில் போலி சிகரெட்டுகள் விற்பனைக்காக வைத்துள்ளதாக நகர காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே அங்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்ட நிலையில் பேருந்து நிலையம் எதிரே பாண்டிகோவில் தெருவில் அமீர்,மற்றும் பிரபு என்பவர்களின் குடோன்களில் சோதனை நடத்தியதில் அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்ட போலீசார் உடனடியாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் சரவணன் தலைமையிலான குழுவினர் அங்கு சோதனை மேற்கொண்டதில் சுமார் 220 கிலோ அளவிலான தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா, உள்ளிட்ட புகையிலை பொருட்கள் குடோனில் பதுக்கி வைத்திருந்ததை கண்ட அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்து அபராதமும் விதித்தனர்.

Updated On: 16 April 2021 12:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  7. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  8. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  9. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  10. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...