பேண்ட் இசை கலைஞர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கிய திமுக நிர்வாகிகள்
புதுக்கோட்டையில் பேண்ட் இசை கலைஞர்களுக்கு திமுக நிர்வாகிகள் கொரோனா நிவாரணம் வழங்கினர்.
HIGHLIGHTS
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது இதனால் கோயில் நிகழ்ச்சிகள் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் தமிழக அரசு அனுமதி அளிக்காததால் பேண்ட் இசைக்கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் பாதிப்பு மிகவும் சிரமப்பட்டு வந்தனர்
இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கிராமியப் பாடகர், மற்றும் திமுக கழகப் பாடகருமான ஆக்காட்டி ஆறுமுகம் ஏற்பாட்டின் பேரில் இன்று புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர் பகுதியில் பேண்டு இசைக்கலைஞர்களுக்கு, அரிசி, மளிகை பொருட்களை, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சந்தோஷ் இசைக் கலைஞர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் 31 வது வட்ட தி,மு.க செயலாளர் ஜேம்ஸ் , வட்டப்பிரதிநிதி ராமு ,ராபர்ட், புவனர், மில்லர் ,ராஜா, பாண்டி. ஜெகன் மணிமாறன். உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர்