/* */

புதுக்கோட்டையில் கரையில் நின்ற கார் குளத்தில் பாய்ந்தது

புதுக்கோட்டையில் குளக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் தானாகவே குளத்தில் மூழ்கியது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை கலிப் நகர் பகுதியில் தனியார் கார் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனி அருகே நகராட்சிக்கு சொந்தமான பெரியகுளம் ஒன்று உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்த காரணத்தினால் குளத்தில் தண்ணீர் அதிக அளவில் உள்ளது. இந்த தனியார் கம்பெனியில் கார்களை சர்வீஸ் செய்தும் தரப்படுகிறது, கார்களை குளக்கரை அருகில் நிறுத்தி வைக்கப் படுவதும் வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், இன்று சொகுசு கார் ஒன்று டெலிவரிக்கு அந்தக் குளக்கரையில் இறக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சொகுசு காரில் ஹேண்ட் பிரேக் போடாத காரணத்தினால் திடீரென்று மெல்ல மெல்ல இறக்கத்தில் இறங்கி கார் குளத்தில் மூழ்கியது.

இதனை பார்த்த தனியார் கார் கம்பெனி நிர்வாகிகள் உடனடியாக ஓடிவந்து பிடிக்க முற்படும் முன் குளத்திற்குள் சொகுசு கார் முழுவதும் மூழ்கியது.ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு குளத்தில் மூழ்கிய சொகுசு காரை பின்னர் வெளியே எடுத்தனர்.

Updated On: 27 April 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க