பெரம்பலூரில் அதிமுகவினர் சார்பில் தண்ணீர் பந்தல்
பெரம்பலூரில் பொதுமக்களின் கோடை வெயிலின் தாகம் தனிக்கும் விதமாக அதிமுகவினர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.
HIGHLIGHTS
ஆண்டு தோறும் கோடையில் நடைபெறும் திருவிழாக்களிலும் நகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும் இடங்களில் தன்னார்வலர்களாலும் கட்சி சார்ந்தவர்களாலும் தண்ணீர் பந்தல்கள் வைப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்கள் பெரிதும் வெளியே வர வாய்ப்புகள் குறைவு என்பதாலும் தண்ணீர் பந்தல் அமைக்கவில்லை. அதே போல் இந்த ஆண்டில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவினால் கட்சியினர் யாரும் தண்ணீர் பந்தல் அமைக்க வாய்ப்பு இல்லாமல் போனது.
கோடைக்காலம் நெருங்கும் முன்பாகவே தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பம் அனல் பறக்க தொடங்கியது. இதனால் மக்கள் பொது வெளியில் நடமாடும் போதும் வேலை காரணமாக பயணப்படும் போதும் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தாகம் தனிக்க தேனீர் விடுதி, குளிர்பான கடைகளை நாடியுள்ளனர். இதனால் எழை எளிய மற்றும் கூழித் தொழிலாளிகள் அல்லல்பட்டு வந்த நிலையில் பெரம்பலூரில் இன்று அதிமுகவினர் சார்பில் புதிதாக தண்ணீர் பந்தல் அமைத்து பொதுக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர்.
மேலும் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்ட இந்த தண்ணீர் பந்தலை பெரம்பலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்து அவ்வழியாக சென்ற பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கும் நீர் மோர், இளநீர், தர்பூசணியை வழங்கி மகிழ்ந்தார்.