/* */

பெரம்பலூர் சுற்றுப்பகுதிகளில் விளம்பரபதாகை, (பிளக்ஸ் போர்டு) பேனர்கள் அகற்றம்

(பிளக்ஸ் போர்டு) பேனர்கள் வைத்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என துணைகாவல் கண்காணிப்பாளர் சரவணன் எச்சரிக்கை.

HIGHLIGHTS

பெரம்பலூர் சுற்றுப்பகுதிகளில் விளம்பரபதாகை, (பிளக்ஸ் போர்டு)  பேனர்கள் அகற்றம்
X

பெரம்பலூர் நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விளம்பரபதாகை (பிளக்ஸ் போர்டு) பேனர்களை காவல்துறையினர்னள் நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

பெரம்பலூர் நகர் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்பான விளம்பர பதாகைகள் வைப்பதால், பாதுகாப்பின்றி விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் விளம்பர பதாகை வைப்பதற்கு தடை விதித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட காவல் துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின்படி பெரம்பலூர் நகர் மற்றும் சுற்றுப் பகுதியில், விளம்பரப் பதாகைகள் பேனர் வைப்பதற்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜூலை 21ம் தேதியான இன்று விளம்பர பதாகைகள் பெரம்பலூர் நகர் பகுதியில் பேனர்கள், விளம்பரப் பதாகைகள் அகற்றும் பணி நடைபெற்றது. பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் மேம்பாலத்தில் ஒட்டப்பட்டிருந்த மிக நீண்ட பேனரை கிரேன் உதவியுடன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோபிநாத் முன்னிலையில் அகற்றப்பட்டன. மேலும் அனைத்துக் கட்சிகள் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

Updated On: 21 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது