Begin typing your search above and press return to search.
வாலிகண்டபுரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்; எம்எல்ஏ துவக்கம்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம், வாலிகண்டபுரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ., பிரபாகரன் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம், வாலிகண்டபுரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை எம்எல்ஏ., பிரபாகரன் துவக்கி வைத்தார்.
பின்னர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்து மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இதனையடுத்து, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் கலந்து கொண்டார் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் , ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், ஊராட்சி மற்ற தலைவர் கலியம்மாள் அய்யாக்கண்ணு, பவானி ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.