/* */

டூ வீலர் மோதி நடந்து சென்ற தொழிலாளி உயிரிழப்பு

Two Wheeler Accident- நாமக்கல் அருகே டூ வீலர் மோதியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

டூ வீலர் மோதி நடந்து சென்ற தொழிலாளி உயிரிழப்பு
X

பைல் படம்.

Two Wheeler Accident- நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அருகில் உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி (57). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு வேலைக்கு சென்று விட்டு வளையப்பட்டியில் இருந்து குரும்பபட்டி செல்லும் வழியில் தனியார் கோழிப்பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கந்தசாமி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கந்தசாமியின் மகன் சவுந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் மோட்டார் சைக்கிளில் சென்றவரை தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 Sep 2022 9:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?