டூ வீலர் மோதி நடந்து சென்ற தொழிலாளி உயிரிழப்பு
Two Wheeler Accident- நாமக்கல் அருகே டூ வீலர் மோதியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
Two Wheeler Accident- நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அருகில் உள்ள குரும்பபட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி (57). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு வேலைக்கு சென்று விட்டு வளையப்பட்டியில் இருந்து குரும்பபட்டி செல்லும் வழியில் தனியார் கோழிப்பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கந்தசாமி, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கந்தசாமியின் மகன் சவுந்தரராஜன் அளித்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் மோட்டார் சைக்கிளில் சென்றவரை தேடி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2