நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா
நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு விநாயகர் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்
HIGHLIGHTS
நாமக்கல் நகரில் மெயின் ரோட்டில் உள்ள பிரசித்திபெற்ற செங்கழநீர் பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. இன்று காலை விநாயகருக்கு, நல்லெண்ணை, திருமஞ்சள், பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல் ச.பே.புதூர் செல்வவிநாயகர் கோயில், மோகனூர் ரோடு முல்லை நகர் செல்வகணபதி கோயில், அன்பு நகர் விநாயகர், அழகு நகர் சக்தி கணபதி கோயில், திருச்செங்கோடு ரோடு மாப்பிள்ளை விநாயகர் கோயில், கணேசபுரம் விநாயகர் கோயில், ராமாபுரம்புதூர் விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் பகுதியில் உள்ள பொதுமக்கள் பலரும் விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.
இந்து முன்னனி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்த அமைப்புகளின் சார்பில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், முக்கிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.