நாமக்கல்லில் திமுக சார்பில் நீட் தேர்வு விலக்கு கோரி கையெழுத்து இயக்கம்
நாமக்கல்லில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சார்பில் நீட் தேர்வு ரத்து கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல்லில் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் சார்பில் நீட் தேர்வு ரத்து கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில், தமிழக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் மூலம் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவிற்கு, ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, “நீட்விலக்கு நம் இலக்கு என்ற நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம், நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான ராஜேஸ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் மூலம், கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் தரணிதரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆனந்தகுமார், மாநில அயலக அணி துணைச் செயலாளர் முத்துவேல், தீர்மானக்குழு துணைத் தலைவர் வக்கீல் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாத், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சத்தியசீலன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் தீபக்குமார் ஆகியோர் வரவேற்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நீட் தேர்வு விலக்கு கோரி கையொப்பமிட்டனர்.
மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன், மாவட்ட துணை செயலாளர் .நலங்கிள்ளி, நகர செயலர்கள் ராணா ஆனந்த், பூபதி, சிவக்குமார், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெயபிரகாஷ், நாமக்கல் நகராட்சி கலாநிதி, தலைமை செயற்குழு உறுப்பினர் மாயவன், பொதுக்குழு உறுப்பினர் சுசிதரன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.