/* */

2 பள்ளி சிறுமிகளை கடத்திச்சென்று பலாத்காரம்: 2 வாலிபர்கள் போக்சோவில் கைது

நாமக்கல்லில் 2 பள்ளி மாணவிகளான கடத்திச்சென்று பலாத்காரம் செய்த 2 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

2 பள்ளி சிறுமிகளை கடத்திச்சென்று பலாத்காரம்: 2 வாலிபர்கள் போக்சோவில் கைது
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம் கண்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் என்பவரது மகன் வினோத் (21). புதன்சந்தை பேட்டை பகுதியை சேர்ந்த வேலன் மகன் சந்தோஷ் (19). நண்பர்களான இவர்கள் 2 பேரும் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த அக்காள்-தங்கைகளான 17 வயது மற்றும் 15 வயது சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2 பேரும் சேர்ந்து அக்காள், தங்கைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையில் தங்களது மகள்களை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சிறுமிகள் 2 பேரும் நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த ஹோட்டலுக்குச் சென்று 2 சிறுமிகளை மீட்டனர். அங்கிருந்த வினோத், சந்தோஷ் ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிறுமிகள் 2 பேரும் 10-ம் வகுப்பு படிக்கும் அக்காள், 8-ம் வகுப்பு படிக்கும் தங்கை என்பதும், தற்போது அவர்கள் பள்ளி விடுமுறையில் ஈரோட்டில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. அக்காள், தங்கை இருவரும் வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது வினோத், தனது நண்பர் சந்தோஷ் உதவியுடன் 2 பேரையும் கடத்தி நாமக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து வினோத், சந்தோஷ் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 22 Jun 2022 12:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...