/* */

நாமக்கல்: கோரிக்கை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நாமக்கல்: கோரிக்கை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
X

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மற்றும் அகவிலைப்படி உயர்வு நிலுவை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் துணை தாசில்தார் தற்காலிக பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு, தகுதியான நபர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Updated On: 2 April 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    மதுரையில் புரோட்டா மாஸ்டர் பயிற்சி பள்ளி..! சர்வதேச உணவான புரோட்டா..!
  2. தென்காசி
    8 நாட்களுக்குப் பின் குற்றால அருவியில் குளிக்க அனுமதி: மகிழ்ச்சியில்...
  3. கடையநல்லூர்
    தமிழக - கேரளா எல்லையில் பிடிபட்ட 12 அடி ராஜ நாகம்
  4. கல்வி
    உயர்கல்வி பயில வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் மாணவர்கள்
  5. திருப்பரங்குன்றம்
    சோழவந்தான் ஆலயங்களில் வைகாசி திருவிழா..!
  6. கல்வி
    அறிவியல் மாணவர்களுக்கான 10 தொழில் வாய்ப்புக்கள்
  7. இந்தியா
    இந்தியாவில் கொடி கட்டிப்பறக்கும் உணவுத்துறை
  8. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே பலத்த மழையால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்