/* */

தமிழக - கேரளா எல்லையில் பிடிபட்ட 12 அடி ராஜ நாகம்

தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள புளியரை பகுதியில் 12 அடி ராஜநாகம் பிடிபட்டது.

HIGHLIGHTS

தமிழக - கேரளா எல்லையில் பிடிபட்ட 12 அடி ராஜ நாகம்
X

பட விளக்கம்: வனத்துறையினர் ராஜநாகத்தை பிடித்த போது எடுத்த படம்.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவரப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலையானது பல்லுயிர் காடுகள் ஆகும். இங்கு புலி, சிறுத்தை, கடாமான், புள்ளிமான், யானை, என பல்வேறு வன உயிரினங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டுமே வாழும் ராஜநாகம் அதிகம் உள்ளது.

இங்குள்ள வன உயிர்கள் அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவது வழக்கமான ஒரு நிகழ்வு.

இந்த சூழலில் தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள புளியரை பகுதியில் ராபர்ட் என்பவருக்கு சொந்தமான விலை நிலத்தில் 12 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பார்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ராஜநாகத்தை லாபகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அதனை வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதியில் விட்டனர். விவசாய நிலத்தில் ராஜ நாகம் பிடிபட்டது விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 26 May 2024 7:20 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தம் அருகே முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
  2. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், கோயில் திருவிழா..!
  3. சிவகாசி
    காரியாபட்டி அருகே அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்...!
  4. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற சர்வதேச பள்ளி..!
  5. சிங்காநல்லூர்
    குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட வெள்ளிக்கோல் வரையன் பாம்பு...
  6. சோழவந்தான்
    டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் மரக்கன்றுகள் நடும்
  7. கோவை மாநகர்
    வானதி சீனிவாசனை இழிவாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக புகார்...
  8. கும்மிடிப்பூண்டி
    ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம்
  9. திருவள்ளூர்
    திருவள்ளூரில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
  10. பொன்னேரி
    பெயிண்ட் மூலப்பொருள் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து..!