நாமக்கல் மாவட்டத்தில் இன்று 10, 11, 12ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு துவக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் 10,11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிராக்டிக்கல் தேர்வு, இன்று 306 மையங்களில் துவங்குகிறது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் 10, 11 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் நடைபெற உள்ளன. 200 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 60,371 மாணவ, மாணவிகள் 175 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்பாக செய்முறை தேர்வுகள் இன்று 25ம் தேதி தொடங்கி மே 2 வரை நடைபெற உள்ளன.
அறிவியல் சார்ந்த பாடங்களை (இயற்பியல், வேதியியல், உயிரியியல், விலங்கியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ்) படிக்கும் மாணவ மாணவிகள் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர். செய்முறை தேர்வு ஒவ்வொரு பாடத்திற்கும் 30 மதிப்பெண்கள் கொண்டதாகும்.
முன்பு 3 மணி நேரமாக இருந்த பிராக்டிக்கல் தேர்வு தற்போது 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்டங்களில் பிளஸ்1, பிளஸ் 2 செய்முறை தேர்வு 146 மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 19,866 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். 10-ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு 156 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 20,502 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப சுழற்சி முறையில் செய்முறை தேர்வு நடைபெறும். இதற்கான தேர்வு அலுவலர்கள், ஏற்கனவே நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு மாவட்ட சிஇஓ பணி நியமன உத்தரவுகளை வழங்கியுள்ளார்.