/* */

கோம்பை நகர் பகுதியை 2 ஆக பிரிக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

திருச்செங்கோடு நகராட்சி 5-வது வார்டு கோம்பைநகர் பகுதியை பிரிக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

கோம்பை நகர் பகுதியை 2 ஆக பிரிக்க எதிர்ப்பு: கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
X

திருச்செங்கோடு நகராட்சி 5வது வார்டு பகுதியை 2ஆக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனு கொடுப்பதற்காக திரளான பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி 5-வது வார்டு கோம்பை நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கோரிக்கை மனு அளித்தனர், அதில் கூறியுள்ளதாவது:

திருச்செங்கோடு நகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட கோம்பைநகர் பகுதியை இரண்டாக பிரித்து, ஒரு பகுதியை நெசவாளர் காலனியில் இணைப்பதாகவும், மற்றொரு பகுதியை 3-வது வார்டு கைலாசம்பாளையம் வேல்முருகன் நகர் பகுதியோடு இணைப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் எங்களுக்கு விருப்பம் இல்லை.

கோம்பைநகர் பகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,000-க்கும் மேல் உள்ளது. முன்புபோல் சேலம் ரோடு பகுதியையும் சேர்த்தால் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1,500-க்கு மேல் வரும். இது சம்பந்தமாக ஏற்கனவே முதலமச்சரின் தனிப்பிரிவு, தேர்தல் அதிகாரி, உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் மனு அளித்தோம். எனவே எங்களின் கோரிக்கைகயை ஏற்று கோம்பை நகர் பகுதியை 3வது வார்டுடன் இணைக்கும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.

மேலும், கோம்பை நகர் பகுதியை இரண்டாக பிரிக்காமல், கோம்பை நகர் மற்றும் சேலம் ரோடு பகுதிகளை ஒன்றாக இணைத்து தனி வார்டாக அறிவிக்க வேண்டும். அல்லது கோம்பை நகர் முழுவதையும், தற்போது இருப்பது போல் நெசவாளர் காலனி பகுதியுடன் ஒன்றாக இணைத்து 5-வது வார்டு பகுதியிலேயே தொடர வேண்டும் என, மனுவில் தெரிவித்துள்ளனர்.

Updated On: 19 Oct 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்