பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற நாமக்கல் கல்லூரி மாணவிக்கு பரிசு
மாநில அளவில் நடந்த பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற நாமக்கல் கல்லூரி மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தமிழகஅரசின் சிறுபான்மையர் நலஆணையம் தமிழகத்தில் உள்ள 38மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவியருக்கானப் பேச்சுப் போட்டியினைத் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் நடத்தியது. இதில் நாமக்கல் மாவட்ட அளவில் பன்முககலாச்சாரம் - இந்தியாவின் சாராம்சம் என்ற தலைப்பிலானஆங்கிலம் பேச்சுப் போட்டியில் நாமக்கல் டிரினிடி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவி பி.எஸ்சி கணிதத்துறை 2ம் ஆண்டு மாணவி மோனிகாஸ்ரீ கலந்துகொண்டு முதலிடம் பெற்றார்.
போட்டியில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்புவிழா மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன்3ம் தேதி சென்னையில் நடைபெற்றது. தமிழக முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில், கலந்துகொண்டு மாணவி மோனிகாஸ்ரீக்கு ரூ.20,000 பரிசு வழங்கிப் பாராட்டினார். மாணவி மோனிகாஸ்ரீக்கு கல்லூரியில் நடைபெற்ற பாராட்டுவிழாவிற்கு கல்லூரி சேர்மன் செங்கோடன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் லட்சுமிநாராயணன், உயர்கல்வி இயக்குனர் அரசுபரமேசுவரன், கணிதவியல் துறைத்தலைவர்கள் மலர்விழி, சரண்யா, நிர்வாகஅலுவலர் செந்தில்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.