நாமக்கல்லில் 6 மையங்களில் நீட் தேர்வு: சோதனைக்கு பின் மாணவர்கள் அனுமதி
நாமக்கல்மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் நீட் தேர்வுக்கு மாணவ மாணவிகள் வருகை துவங்கியது. மொத்தம் 3,853 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
HIGHLIGHTS
இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேருவதற்கு, தேசிய தேர்வு மையம் மூலம் இன்று 12ம் தேதி நீட்தேர்வு நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம் பாவை இன்ஜினியரிங் கல்லூரி, நாமக்கல் ஸ்பெக்ட்ரம் லைப் பள்ளி, பல்லக்காபாளையம் ராயல் இன்டர்நேஷனல் பள்ளி, நாமக்கல் செல்வம் இன்ஜினியரிங் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். அக்ஷரா அகாடமி, கீரம்பூர் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி ஆகிய 6 மையங்களில் நீட்தேர்வு நடைபெறுகிறது.
ஹால் டிக்கட்டுகளில் குறிப்பிட்டுள்ளபடி, காலை 11 மணி முதல், மதியம் 1.30 மணி வரை குறிப்பிட்டுள்ள நேரப்படி மாணவ மாணவிகள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக, ணவர்களிடம் சோதனை செய்யப்பட்டு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பகல் 1.30 மணிக்கு மேல் வருபவர்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 2 மணி தொடங்கி மாலை 5 மணி வரை, தேர்வு நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 மையங்களில் மொத்தம் 3,853 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில், கடந்த ஆண்டு 4,839 பேர் தேர்வு எழுதினார்கள். நீட் தேர்வு மையங்களில் வழக்கம் போல இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூடங்களுக்குள் செல்லும் மாணவ மாணவிகளுக்கு, மாஸ்க்குகள் வழங்கப்படுகிறது. அதையே அவர்கள் பயன்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அனைத்து மாணவர்களும் சானிடைசர் எடுத்துச் செல்ல அனுமக்கப்பட்டுள்ளது.