Begin typing your search above and press return to search.
ஹெல்மட் அணிவதன் அவசியம், போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி
நாமக்கல்லில் ஹெல்மட் அணிதல் மற்றும் போதைப்பொருட்களை தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு டூ வீலர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், டூ வீலரில் ஹெல்மட் அணிவன் அவசியம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து இருசக்கர வாகனப் பேரணி துவக்க விழா நடைபெற்றது.
கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். நல்லிபாளையம், சேலம் ரோடு, நாமக்கல் பஸ் நிலையம், பரமத்திரோடு, பார்க் ரோடு வழியாக நடைபெற்ற பேரணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இப்பேரணியில் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மட் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் , போதைப் பொருட்கள் பயன்டுத்துவதை தவிர்க்க வேண்டியன் அவசியம் குறித்தும், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் ஆயுதப்படை டிஎஸ்பி இளங்கோவன், ஆர்டிஓக்கள்முருகேசன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.