நாமக்கல் கோயில்களில் சிறப்பு பூஜை - பக்தர்கள் வழிபாடு
நாமக்கல் பகுதி மாரியம்மன் கோயில்களில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
HIGHLIGHTS
தமிழகத்தில், ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், பெண் பக்தர்கள் அதிகாலைகளில் அம்மன் கோயில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம்.
அவ்வகையில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், வண்டிக்காரன் தெரு பகவதியம்மன் கோயில், அன்புநகர் சுயவேம்பு மாரியம்மன் கோயில், கொண்டிசெட்டிபட்டி காளியம்மன் கோயில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோயில், சின்னமுதலைப்பட்டி அம்மச்சியம்மன் கோயில், கே.கே.வி நகர் பாலாம்பிகை கோயில், செல்லப்பம்பட்டி சுயம்பு மகா மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில், நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள், முகக்கவசம் அணிந்து, அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடித்து, அம்மனை வழிபட்டுச் சென்றனர். கொரோனாவில் இருந்து விரைவில் நாடும், மக்களும் விடுபட வேண்டுமென்று, பல இடங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.