நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி என்எஸ்எஸ் சிறப்பு முகாம்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் என்எஸ்எஸ் திட்ட சிறப்பு முகாம் லத்துவாடி கிராமத்தில் நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி என்எஸ்எஸ் திட்ட மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் லத்துவாடி கிராமத்தில் ஒரு வாரம் நடைபெற்றது.
ஒருவார முகாமில் மாணவ மாணவிகள் பல்வேறு சமூக சேவைகளை செய்தனர். முகாம் நிறைவு விழாவில் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் நாகராஜன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முருகன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் பங்காரு, இன்னமுது, லத்துவாடி பஞ்சாயத்து தலைவர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாமக்கல் டிஎஸ்பி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: மாணவர்கள் சிறு வயதில் தவறு செய்து, போலீஸ் வழக்குப் பதிவு செய்தால், அது அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும். எனவே மாணவ மாணவிகள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும். சிறந்த முறையில் படித்து, போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்று, உயர்ந்த அரசு பணிக்கு சென்றால் உலகம் உங்களை மதிக்கும். இதுவே உங்கள் பெற்றோருக்கும், கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் பெருமையாகும் என்று கூறினார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் பழனிசாமி, நாகரத்தினம், உடற்கல்வி இயக்குனர் கார்த்திக், உதவி பேராசிரியர் கந்தசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.