/* */

பட்டா வழங்க ரூ. 500 லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

பட்டா எண் வழங்க விவசாயியிடம் ரூ.500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ ஒருவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

HIGHLIGHTS

பட்டா வழங்க ரூ. 500 லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
X

பைல் படம்

நாமக்கல் மாவட்டம், என்.புதுக்கோட்டை கிராமம் பாலப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (40) விவசாயி. அவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி வி.ஏ.ஓ சதாசிவத்திடம் விண்ணப்பித்துள்ளார்.

அதற்கு ரூ. 500 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே, பட்டா எண் வழங்க முடியும் என விஏஓ சதாசிவம் கண்டிப்பாக கூறிவிட்டார். லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொள்ளாத சரவணன், இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி புகார் செய்தார்.

அவர்களின் ஆலோசனைப்படி ரசாயண பவுடர் தடவிய ரூ.500ஐ விவசாயி சரவணன், விஏஓ சதாசிவத்திடம் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சதாசிவத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு, கடந்த 16 ஆண்டுகளாக நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார். அதில், லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ சதாசிவத்துக்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையொட்டி விஏஓ சரவணன் போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Updated On: 15 Sep 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  2. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  3. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  4. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  5. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  6. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  7. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  8. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!