நாமக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் 597 பேருக்கு கொரோனா பாதிப்பு!
நாமக்கல் மாவட்டத்தில், ஒரேநாளில் 597 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37,444 ஆக உயர்ந்துள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 800க்கு மேல் இருந்து வந்தது. கடந்த 4 நாட்களாக, இது எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்று ஒரேநாளில் நாமக்கல், குமாரபாளையம், ராசிபுரம், ப.வேலூர், சேந்தமங்கலம், காளப்பாநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், வெப்படை, திருச்செங்கோடு, பெரியமணலி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 597 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 30,342 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 6,780 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று 13 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 322 ஆக உயர்ந்துள்ளது.