அறநிலையத்துறை மூலம் நடைபெறும் இலவச திருமணத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
Namakkal Sree Anjaneyar Temple - நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள், அறநிலையத் துறை நடத்தும் இலவச திருமணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
Namakkal Sree Anjaneyar Temple -நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள், அறநிலையத் துறை நடத்தும் இலவச திருமணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயில் உதவி கமிஷனர் இளையராஜா கூறுகையில், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய, இந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர் அலுவலகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும், 25 ஜோடிகளுக்கு அறநிலையத்துறை மூலம் இலவச திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது.
திருமணத்தின் போது, மணமக்களுக்கு தங்க திருமாங்கல்யம் (2 கிராம்), புத்தாடைகள், மணமகன், மணமகள் வீட்டாருக்கு விருந்து உணவு, சீர்வரிசை பாத்திரங்கள், பூமாலைகள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இத் திட்டத்தின் கீழ்திருமணம் செய்து பயன்பெற பெற விரும்புபவர்கள் நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் அலுவலகத்தை அணுகி கூடுதல் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2