நாமக்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
HIGHLIGHTS
நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில், 75-வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி வைத்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மாநில திமுக விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர் கைலாசம், நாமக்கல் தெற்கு நகர கழக செயலாளர் ராணா ஆனந்த், நகராட்சி கவுன்சிலர்கள் தனசேகர், சரவணன், பாலுச்சாமி, தேவராஜ், கிருஷ்ணமூர்த்தி, நந்தகுமார், டாக்டர் விஜய் ஆனந்த், சுரேஷ்குமார், லீலாவதி, தெற்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியர் ஜெகதீசன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாகரத்தினம், கூடைப்பந்து கழக தலைவர் நடராஜன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
முன்னதாக நாமக்கல் தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் எம்எல்ஏ ராமலிங்கம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
நாமக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில், தோளூர்ப்பட்டியில் உள்ள கொங்குநாடு கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவிற்கு கல்லூரி சேர்மன் டாக்டர் பெரியசாமி தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் அசோகன், கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அய்யாதுரை மற்றும் கொங்குநாடு பி.எட் கல்லூரி முதல்வர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவ மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
நாமக்கல், நேசனல் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழாவிற்கு பள்ளி சேர்மன் சரவணன் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தேசத்தலைவர்களின் வேடம் அணிந்து அணிவகுத்து வந்தனர். விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் ராஜசுந்தரவேல் சான்றிதழ் வழங்கினார். மேல்நிலைவகுப்பு முதல்வர் விக்டர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.
நாமக்கல் டிரினிடிமகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 75-வது சுதந்திரதினவிழாவில் கல்லூரி சேர்மன் செங்கோடன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தேசபக்தியை வலியுறுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. செயலாளர் நல்லுசாமி, டிரினிடி சிபிஎஸ்இ பள்ளி தலைவர் பழனிசாமி, கல்லூரி முதல்வர் லட்சுமிநாõயணன், உயர் கல்வி இயக்குனர் அரசுபரமேஸ்வரன், நாமக்கல் டிஎஸ்.பி சுரேஷ், நாமக்கல் டவுன் போலீ ஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75வது சுதந்திர தின விழா மாவட்ட தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது. மாநில காங்கிரஸ் கமிட்டி துனணத் தலைவர் (ஓபிசி) டாக்டர் செந்தில் விழாவில் கலந்துகொண்டு இலவச மரக்கன்றுகளை வழங்கினார். மாநில துணைத்தலைவர் டாக்டர் செழியன், நகர தலைவர் மோகன் ஆகியோர் முன்னினல வகித்தனர், முன்னாள் மாவட்ட தலைவர் சுப்ரமணியன், ரிஷிவேதாந்த், செல்வம், முருகன், மாதேஸ்வரன், ஜபருல்லா, கிரன்சிங், சுந்தர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.