/* */

உடல் நலம் பாதிப்பால் விரக்தி: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல் அருகே உடல்நலம் சரியில்லாததால், விரக்தியடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

உடல் நலம் பாதிப்பால் விரக்தி: தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்

நாமக்கல் அருகே உள்ள, எறையம்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (55), கூலித்தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இன்னும் இருவருக்கு திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் விரக்தியடைந்த பழனிசாமி, வீட்டில் தனியாக இருந்தபோது, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், தனது மகளுக்கு போன் செய்து விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த, அவரது மகள் வீட்டுக்கு வந்து, தந்தையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். இதுகுறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 May 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  3. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  6. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  7. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  8. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  9. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  10. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...