/* */

மாஜி அமைச்சர் செங்கோட்டையனின் உதவியார் என கூறி ரூ.10.80 லட்சம் மோசடி

முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் என கூறி, மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ 10.80 லட்சம் மோசடி.

HIGHLIGHTS

மாஜி அமைச்சர் செங்கோட்டையனின் உதவியார் என கூறி ரூ.10.80 லட்சம் மோசடி
X

பைல் படம்.

திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இன்ஜினியரிங் பட்டதாரியான இவரிடம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவர், தனது மகன் மேகவர்மன், மாஜி அமைச்சர் செங்கோட்டையனிடம் உதவியாளராக பணிபுரிவதாகவும், ரூ. 10 லட்சம் பணம் கொடுத்தால், அவர் மூலம் மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி, மேகவர்மன் வங்கி கணக்கில் இரண்டு தவணையாக ரூ. 8 லட்சமும், நேரில் ரூ. 2.80 லட்சமும் கார்த்திக் கொடுத்துள்ளார்.

பணம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து கார்த்திக் ஏற்கனவே திருச்செங்கோடு போலீசில் புகார் அளித்தள்ளார். அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தற்போது, மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது பணத்தை திருப்பிப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Updated On: 8 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  2. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  3. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  6. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  7. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  8. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  9. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு