Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு
நாமக்கல்லில் மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மின்சார சிக்கன வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இம்மாதம் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு வருகின்றன.
இதையொட்டி, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து, மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது, பாதுகாப்பாக கையாள்வது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
தமிழ்நாடு மின்வாரிய, ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் முரளிதரன், நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம், செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்த்பாபு, சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.