/* */

நாமக்கல்லில் மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல்லில் மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி: கலெக்டர் பங்கேற்பு
X

நாமக்கல்லில் நடைபெற்ற, மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் ஸ்ரேயாசிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மின்சார சிக்கன வார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இம்மாதம் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்பட்டு வருகின்றன.

இதையொட்டி, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து, மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது, பாதுகாப்பாக கையாள்வது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கையேடுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

தமிழ்நாடு மின்வாரிய, ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் முரளிதரன், நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம், செயற்பொறியாளர் சபாநாயகம், உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்த்பாபு, சவுந்தரபாண்டியன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 19 Dec 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...