Begin typing your search above and press return to search.
நாமக்கல்: மின்சார வாரியம் சார்பில் 4 இடங்களில் குறைதீர் கூட்டங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் 4 இடங்களில் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
இது குறித்து நாமக்கல் வட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் வட்ட மின்சார வாரியத்தின் சார்பில், ஏப்ரல் மாதத்திற்கான பொதுமக்கள் குறைதீர் கூட்டங்கள் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களில் நடைபெற உள்ளன. வருகிற 6ம் தேதி புதன்கிழமை நாமக்கல்லிலும், 13ம் தேதி புதன்கிழமை பரமத்திவேலூரிலும், 20ம் தேதி புதன்கிழமை திருச்செங்கோட்டிலும், 27ம் தேதி புதன்கிழமை ராசிபரத்திலும், மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் இந்த குறைதீர் கூட்டங்கள் நடைபெறும். சம்மந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், கோட்ட அலுவலகங்களில் நேரில் சந்தித்து தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.