Begin typing your search above and press return to search.
மோகனூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
மோகனூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள அரூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் மாரியாயி (40). இவருக்கு குமார் என்பவருடன் திருமணம் நடந்தது, சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, கூலித்தொழிலாளியான பெருமாள் என்பவருடன் மாரியாயி வசித்து வந்தார். இந்த நிலையில் மாரியாயின் நடத்தையில், பெருமாள் சந்தேகப்பட்டார். இது சம்பந்தமாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மனமுடைந்த பெருமாள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் உயிரிழந்தார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.