/* */

இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் துரைசாமி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கணபதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். மின் வாரியத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும். டீசல் இன்ஜின் வைத்துள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். ஊரக வேலை திட்டத்தில் புதிதாக கொண்டு வந்த சட்ட பிரிவு 43ஐ ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. சங்க மாவட்டச் செயலாளர் சபாபதி, உதவித் தலைவர் செல்வராஜ், சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி, மாவட்ட துணைத்தலைவர் குப்பண்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 April 2022 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு