மார்கழி மாதத்தில் திருக்கோயில்கள் நடை அடைப்பு: பக்தர்கள் ஏமாற்றம்
மார்கழி மாதத்தில் திருக்கோயில்கள் நடை அடைக்கப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றத்துள்ளாகினர்.
HIGHLIGHTS
கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைஸ் பரவலை கட்டுப்படுத்த, வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருக்கோயில்களை மூடி வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்கள் அனைத்தும் இன்று முதல், 3 நாட்கள் மூடப்பட்டுள்ளன.
நாமக்கல் நகரில் உள்ள அருள்மிகு நரசிம்மசாமி, நாமகிரித்தாயார் கோயில், ஆஞ்சநேயர் கோயில், பலபட்டரை மாரியம்மன் கோயில், கூலிப்பட்டி முருகன் கோயில் உள்ளிட்ட, மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்கள் அனைத்தும் இன்று முதல், 3 நாட்கள் மூடப்பட்டுள்ளன.
கோயில்கள் அனைத்தும் மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணிக்கே திறக்கப்படுகின்றன. ஏராளமான பெண்கள் அதிகாலை 5 மணிக்கு குளித்துவிட்டு, குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து கோயில்களில் சாமிக்கு ஊற்றி வழிபடுவது வழக்கம். தற்போது மார்கழி மாதத்தில் முக்கிய கோயில்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் அதிருப்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.