Begin typing your search above and press return to search.
உலக புத்தக தினம்: நாமக்கல் மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி துவக்கம்
உலக புத்தக தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் புத்தக கண்காட்சி தொடங்கியது .
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட மைய நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள, புத்தக கண்காட்சி துவக்க விழாவிற்கு, எம்எல்ஏ ராமலிங்கம் தலைமை வகித்து, கண்காட்சியை திறந்து வைத்தார். நகராட்சி கவுன்சிலர்கள் நந்தினி தேவி, நந்தகுமார், நூலக அலுவலர் ரவி, முதல்நிலை நூலகர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவிஞர் நூலக வாசகர் வட்ட தலைவர் மோகன், பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள். உலக புத்தக தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கதை சொல்லும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.