செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து ஸ்கேட்டிங் விழிப்புணர்வு
Chess Competition - நாமக்கல்லில் ஸ்கேட்டிங் வீரர்கள் மூலம் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்சியை, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
Chess Competition -தமிழகத்தில் முதல்முறையாக, சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் வருகிற 28ம் தேதி முதல் ஆக.10ம் தேதி வரை 44வது செஸ் ஓலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்திரவின் பேரில், நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 80க்கும் மேற்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் கல்நதுகொண்ட ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் சின்னம் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் போட்டியில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் அமைப்பினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பிஆர்ஓ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2