Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் 15ம் தேதி சுதந்திர தின விழா: கலெக்டர் தேசியக் கொடியேற்றம்
நாமக்கல்லில் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா வரும் 15ம்தேதி திங்கள்கிழமை, காலை 9 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் விழாவில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தொடர்ந்து அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்குகிறார். ö தாடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி, டிஆர்ஓ (பொ) மல்லிகா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்துகொள்கின்றனர்.