/* */

கஞ்சா போதையில் சாலையில் சென்றவர்களை கடித்த இளைஞர்

தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

HIGHLIGHTS

கஞ்சா போதையில் சாலையில் சென்றவர்களை கடித்த இளைஞர்
X

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. இன்று மதியம் போதையில் இருந்த கண்ணன் சாலையில் சென்ற பொதுமக்களிடம் வம்பு சண்டை இழுத்து அவர்களை கடித்து அச்சுறுத்தி உள்ளான். இதனை கண்ட பொதுமக்கள் அவனை எச்சரித்த நிலையில் தொடர்ந்து பலரிடம் தகராறு செய்து கடித்ததாக தெரிகிறது. உடனடியாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கண்ணனுக்கு தர்ம அடி கொடுத்து கை, கால்களை கட்டி சரக்கு ஆட்டோவில் ஏற்றி கொண்டு சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரையும் கடிக்க முற்பட கண்ணனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த நிலையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதித்து கஞ்சா போதை குறைய மயக்க ஊசி செலுத்தி அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா போதையில் இருந்த கண்ணனுக்கு தொடர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Updated On: 21 Jan 2021 12:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு