நாம் தமிழர் சார்பில் நகராட்சியில் மனு
நாம் தமிழர் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கக்கப் பட்டது
HIGHLIGHTS
நாம் தமிழர் கட்சி சார்பில் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
குமாரபாளையம் நகராட்சியில் மழைக்காலம் துவங்க உள்ளதால் அனைத்து பகுதியிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும், அம்மன் நகர் திருவள்ளுவர் வீதியில் வடிகால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் (பொ) ராஜேந்திரனிடம் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாநில துணை தலைவர் வருண் தலைமையில் அளிக்கப்பட்டது.
இதில் மாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர் யுவராணி, தொகுதி செயலர் சத்தியமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பாசறை செயலர் அசோகன், நகர செயலர் பாலாஜி, நிர்வாகி பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.