/* */

சேவல் சண்டையில் சூதாட்டம் நடத்திய நால்வர் கைது

குமாரபாளையத்தில் நடைபெற்ற பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்

HIGHLIGHTS

சேவல் சண்டையில்  சூதாட்டம் நடத்திய நால்வர் கைது
X

பைல் படம்

குமாரபாளையத்தில் சேவல் சண்டை சூதாட்டம் நடத்திய நால்வர் கைது

குமாரபாளையம் அருகே காந்திநகர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் நேரில் நேற்றுமுன்தினம் மாலை 04:00 மணியளவில் சென்று பார்த்த போது, அங்கு நான்கு பேர் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விசாரணை செய்ததில், பவானியை சேர்ந்த சுரேஷ்(38,), ஈரோட்டை சேர்ந்த பாஸ்கரன்( 48,) கனகராஜ்( 28,) குப்பாண்டபாளையத்தை சேர்ந்த சவுந்தர்( 27,) என்பது தெரியவந்தது. இவர்கள் நால்வரையும் கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்த நான்காயிரம் மதிப்புள்ள இரண்டு சேவல்கள், பணம் ஆயிரத்து 200 ரூபாய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கட்டிட வேலையின் போது நிலைதடுமாறி விழுந்த பெண் படுகாயம்

குமாரபாளையம் ஆலாங்காட்டுவலசு பகுதியில் வசித்து வருபவர்கள் அண்ணாமலை, 60, அருக்காணி, 50. கட்டுமான தொழிலாளிகள். மார்ச் 10ல் காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும், கட்டிட வேலைக்கு, பவானியை சேர்ந்த கருப்பண்ணன், 67, அழைக்க இருவரும் சென்றனர். அன்று மாலை 04:00 மணியளவில் மாடி படிக்கட்டு ஏறும்போது, அருக்காணி நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இவரை ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து இவர்களது மகன் ரமேஷ், 28, புகார் கொடுக்க, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

பெற்றோர் வீட்டிலிருந்த மனைவியை தாக்கிய கணவன் தலைமறைவு

குமாரபாளையம் சிவசக்தி நகர் பெற்றோர் வீட்டில் வசித்து வருபவர் மோகனாம்பாள், 38. சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் கணவர் வேலுமணி(44,) என்பவருடன் வசித்து வந்தார். அப்போது வீட்டின் படுக்கை அறை, குளியல் அறை ஆகிய இடங்களில் கேமரா வைத்த வழக்கில், நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

சிறையில் இருந்து வெளியில் வந்த பின், இவர் மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்த மோகனாம்பாள், தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வேலுமணி மற்றும் சிலர் நேற்றுமுன்தினம் காலை 10:30 மணியளவில் சிவசத்தி நகரில் உள்ள தன் மனைவியை சந்தித்து தகாத வார்த்தை பேசியதுடன், தாக்கியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருத்து தப்பி சென்று விட்டார். இது குறித்து மோகனாம்பாள் குமாரபாளையம் போலீசில் தன் கணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, புகார் கொடுத்துள்ளார். தலைமறைவான வேலுமணியை போலீசார் தேடி வருகின்றனர்.




Updated On: 16 March 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...