/* */

குமாரபாளையத்தில் நாளை (29ம் தேதி) நகரமன்ற கூட்டம்

குமாரபாளையத்தில் நாளை (29ம் தேதி) நகரமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் நாளை (29ம் தேதி) நகரமன்ற கூட்டம்
X

பைல் படம்.

குமாரபாளையம் நகரமன்ற கூட்டம் சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் சில கூட்டங்கள் நடைபெற்றன. இதில் எதிர்கட்சியினருக்கு இருக்கை அமைத்தல், பெண் கவுன்சிலர்களுக்கு முன் வரிசையில் இருக்கை கேட்டது, அரசு விழாவில் கவுன்சிலர்களை அழைக்காமல் விழா நடத்தியது குறித்து விவாதம், கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது என பரபரப்பாக நடைபெற்றது.

சமீபத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர், நகராட்சி கமிஷனர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாளை (29ம் தேதி)காலை 10:00 மணியளவில் நகரமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது.

நடைபெறவுள்ள நகர்மன்ற கூட்டம் அனைவரின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 28 Jun 2022 12:45 PM GMT

Related News