Begin typing your search above and press return to search.
நாகையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் வீடியோகான்பரன்ஸ் கலந்துரையாடல்
நாகையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் வீடியோகான்பரன்ஸ் மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
HIGHLIGHTS
நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் அருகே உள்ள ஜியோ அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை திட்ட மேலாளர் மெய்கண்டன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலையம் கால்நடை மருத்துவர் சு.முத்துகுமார் நாகப்பட்டினம், மருத்துவர் கோபிநாத் கலந்து கொண்டு கன்று பராமரிப்பு, குளிர்காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள், தீவன மேலாண்மை, குடல்புழு நீக்கம் செய்தல் அவசியம், கொட்டகை அமைத்தல், லாபகரமாக முறையில் கால்நடை பராமரிப்பு, மூலிகை மருந்துவம் குறித்து விளக்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.