/* */

பேருந்துகள் வராததால் மாணவர்கள் சாலை மறியல்

நாகூரில் வழக்கமாக வருகின்ற பேருந்துகள் வராத காரணத்தால், காத்திருந்த மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

பேருந்துகள் வராததால் மாணவர்கள் சாலை மறியல்
X

பேருந்துகள் வராததால் காத்துக்கிடக்கும் பொதுமக்கள் 

நாகை மாவட்டம் நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் மாலையில் பள்ளி கல்லூரி முடித்த மாணவ மாணவிகள், கூலி தொழிலாளர்கள் பேருந்து மூலம் வீடு திரும்புவார்கள்.

நாகூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக திருவாரூர் செல்ல கூடிய 3 பேருந்துகளுக்கு வழக்கம்போல நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல வருகின்ற பேருந்துகள் வராத காரணத்தால் இரவு 8 மணி வரையும் காத்திருந்த மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கூடுதல் பேருந்தை சரியான நேரத்திற்கு இயக்க வேண்டுமென மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து நாகை அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து மூன்று பேருந்துகள் வர வைக்கப்பட்டதால், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் போராட்டம் காரணமாக நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 18 Dec 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது