/* */

ஹெல்மெட் கொள்ளையர்கள் அட்டகாசம்: பெண்ணிடம் 4 சவரன் நகைகள் கொள்ளை

கிருஷ்ணகிரி அருகே பெண்ணின் கழுத்திலிருந்து 4 சவரன் தங்க செயினை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

HIGHLIGHTS

ஹெல்மெட் கொள்ளையர்கள் அட்டகாசம்:  பெண்ணிடம் 4 சவரன் நகைகள் கொள்ளை
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி அடுத்த கனகமுட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதம்மாள். இவர் நேற்று மதியம் கிருஷ்ணகிரி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மேல்சோமார் பேட் பகுதியில் உள்ள நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

மேல்சோமார் பேட் நடு வீதி அருகே வந்துகொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத இரண்டு பேர் மாதம்மாள் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து மாதம்மாள் கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் இன்று வழக்குப்பதிவு செய்து ஹெல்மெட் கொள்ளையர்களை தேடி வருகிறார்.

Updated On: 10 Sep 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது