/* */

பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி மாணவி நானாக இருக்கட்டும்: கடிதத்தில் உருக்கம்

பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி மாணவி நானாக இருக்கட்டும் என்று 12 ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

HIGHLIGHTS

பாலியல் துன்புறுத்தலால்  உயிரிழக்கும் கடைசி மாணவி நானாக இருக்கட்டும்: கடிதத்தில் உருக்கம்
X

மாணவியின் கடிதம்.

கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்ற, அரசு காலனி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி நேற்று மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய நிலையில், தனது வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து வெங்கமேடு காவல் நிலைய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவி மரண வாக்கு மூலமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிரிந்துள்ளார். அந்தக் கடித்தல், பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நான் இருக்க வேண்டும். யார் என்னை இந்த முடிவை எடுக்க வைச்சாங்கான்னு சொல்ல பயமா இருக்கு. இந்த பூமியில் வாழனும்னு ஆசைபட்டேன்… ஆனா பாதியிலேயே போகிறேன்… என ஒரு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வழக்கு பதிந்த வெங்கமேடு காவல் நிலையப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல், உடற் கூறு ஆய்வுக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On: 20 Nov 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி