/* */

கனமழை காரணமாக வரத்து குறைவு - 5 மடங்காக உயர்ந்த பூக்களின் விலை

கனமழை காரணமாக வரத்து குறைந்ததோடு தேவை அதிகரிப்பால், குமரியில் பூக்களின் விலை 5 மடங்காக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

கனமழை காரணமாக வரத்து குறைவு - 5 மடங்காக உயர்ந்த பூக்களின் விலை
X

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற மலர் சந்தை

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற மலர் சந்தையில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்திற்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. கனமழை காரணமாகவும், பனிப்பொழிவு காரணமாகவும் பூக்களின் வரத்து, ஐந்தில் ஒரு பங்காக குறைந்துள்ள நிலையில் தற்போது கார்த்திகை மாதம் பிறந்ததால் கோவில்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகைப்பூ, தற்போது 1,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பிச்சிப்பூ, தற்போது 850 ரூபாய்க்கும், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தாமரை தற்போது 12 ரூபாய்க்கும், கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரளிப்பூ தற்போது 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ரோஜா செவ்வந்தி கிரேந்தி உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.

Updated On: 17 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...